Friday 28 February 2020

நாம் எதைக் காதலிக்க வேண்டும்… நேசிக்க வேண்டும்… சுவாசிக்க வேண்டும்…?


சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்கு வள்ளி திருமணம் என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்,

வள்ளி திணைக் காட்டிலே காவல் காத்துக் கொண்டு இருக்கின்றாள்தான் விளைய வைத்த பொருளை மற்றது கொத்தித் தின்று விடாதபடித் தன் பாதுகாப்பிற்காக வேண்டி அங்கே காவல் புரிகின்றாள்.

வெகு தூரத்தில் இருந்து வருவதைத் தன் பாதுகாப்புக்காக வேண்டி கவண் கொண்டு வீசுகின்றதுஅவள் யார்...? வேடுவனின் மகள்.

பல கோடிச் சரீரங்களில் வேட்டையாடி அதிலே விளைந்த சக்தி தான் மனித உடலில் இருந்து வரக்கூடிய வலிமை மிக்க சக்தி “ஆறாவது அறிவு” வள்ளி.

பாதுகாக்கும் சக்தி – வலிமை – வல்லவன் – வல்லவி = “வள்ளி”

வல்லவன் “வல்லவி...” வள்ளி என்று பெண்பாலைக் காட்டி எதைத் தன்னுடன் இணைத்துச் செயல்பட வேண்டும் என்பதை வள்ளி திருமணம்” என்ற காவியமாகப் படைத்துத் தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.
1.அந்த வள்ளியை முருகன் காதலிக்கின்றான்.
2.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
3.இந்த வலிமை மிக்க சக்தியைத் தனக்குள் நேசிக்க வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்டு உடல் பெற்றவன் முருகா… “முருகு….” முருகு என்றால் மாற்றி அமைக்கும் சக்தி.

தீமையை மாற்றியமைக்கும் உடல் பெற்றவர்கள் மனிதர்கள் என்றும் தன்னைப் பாதுகாக்கும் ந்தச் சக்தியை நீ நேசிக்க வேண்டும் என்று காவியப் படைப்பு வருகின்றது.

நம்மை ஏசுவோரையும் நமக்குத் தீமை செய்வோரையும் நாம் எண்ணிக் கொண்டிருந்தால் என்றால் அது நம்முடைய நல்ல உணர்வைத் தின்றுவிடும்.

வேதனைப்படுவதை ஒருவர் சொல்லி விட்டால் அந்த உணர்வின் சக்தி நமக்குள் வந்து நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைத் தின்றுவிடும்.

 அதாவது வேதனை வேதனை என்று அதை நாம் நுகர்ந்தால் டி.பி. நோய் வருகின்றது. நம் நல்ல குணங்களை உடலை அது தின்று விடுகின்றது.

அதைத் தான் திணைக் காட்டில் குருவியை உட்கார விட்டோம் என்றால் அதில் விளைய வைத்ததைத் தின்று விட்டுப் போய்விடும். வள்ளி அவ்வாறு ஆகாதபடி அதைக் காவல் காக்கின்றாள் என்று காட்டினார்கள் ஞானிகள்.

1.நம்மைப் பாதுகாக்கும் உணர்வை நாம் நேசித்தால்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்தால்
3.நம் உடலுக்குள் சென்றபின் “தெய்வ ஆணை…!”
4.இந்த உடலில் காத்திடும் செயலாக உயிர் இயக்குகின்றது.

உயிர் = தெய்வம்; இயக்கம் = ஆணை – “தெய்வ ஆணை”

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த வலிமை மிக்க சக்தியை (வள்ளி) நேசித்தால் அது நம் உயிரிலே பட்டுத் தெய்வ ஆணையாக இயக்கும்.
1.தெய்வச் செயலாக நம்மைச் செய்ய வைக்கும்.
2.தெய்வீக நிலையைப் பெறச் செய்யும்.
3.அதைத் “திருமணம் செய்து கொள்...!” என்று தான் வள்ளி திருமணத்தைக் காட்டினார்கள் ஞானிகள்.

திருமூலரின் சரித்திரம்


பதஞ்சலி முனிவர் தனக்குள் அந்த விண்ணுலக ஆற்றலை அகஸ்தியன் காட்டிய இந்த முறைகளை மாற்றி கூடு விட்டுக் கூடு பாயும் நிலைகளைச் செய்தவர்.

அதாவது விஷத்தின் தன்மை தனக்குள் செருகேற்றி பாம்பின் உடலுக்குள் புகுந்த பின் பாம்பின் உடலிலுள்ள நஞ்சை இன்னோர் உடலுக்குள் பாய்ச்சி அந்த உடலின் வலிமையை இழக்கச் செய்து அந்த உடலுக்குள் புகுந்து அந்த உடலை ஆட்கொண்டு தன் செயலாக்கங்களுக்குப் பயன்படுத்தும் முறைகள் தான் அது.

அந்த அரசனுக்குத் தான் முனிவர் என்று பெயர் வைத்துப் பதஞ்சலி முனிவர் என்றார்கள்.

மந்திர ஒலியைத் தன் மக்களுக்குள் பதியச் செய்து தன் மதத்தின் கீழ் மடிந்த மக்களின் உணர்வைத் தனக்குள் கவர்ந்து… கவர்ந்து… மிக சக்தி வாய்ந்தவர்களாக மாறுவார்கள்.

யாரைக் கண் கொண்டு பார்த்தாலும் தன் ஆற்றலைப் பாய்ச்சி அவர்களை அடக்கி ஆட்சி புரியும் நிலைகள் பெற்றவர்கள். அப்படிப்பட்டவர்களைத் தான் முனிவர் என்று சொல்வார்கள்.

1.இன்றும் அந்த மந்திர ஒலிகள் பெற்று இறந்தவர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றால்
2.புகுந்த உடலிலுள்ளோர் ஒரு மனிதனை அறியாது கண் கொண்டு பார்த்தாலும்
3.அந்த மனிதனுடைய உடல் கருகும்.
4.இரும்பைக் காட்டினால் உருகும். ஆனால் அவனுக்கே தெரியாது.

இதை நேரடியாக நான் (ஞானகுரு) கண்டுணர்வதற்காக ஒரு சமயம் பம்பாய் நகருக்கு அருகில் ஒரு குக்கிராமத்திற்கு அழைத்துச் சென்றார் குருநாதர்.

அங்கே உள்ள ஒரு பையனுக்கு அது ஒன்றும் தெரியாது. அவன் உடலுக்குள் புகுந்த அந்த ஆவியால்
1.யாரையாவது அவன் பார்த்தான் என்றால் அல்லது நினைத்தான் என்றால்
2.அந்த உடலில் ஓட்டையே போட்டு விடும்.
3.ஒரு இரும்பைப் பார்க்கிறான் என்றால் கரைந்து அப்படியே தொங்கும்.
4.அந்த அளவிற்கு வெப்பக் கனல் அவன் உடலிலிருந்து வருகிறது.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் மந்திர ஒலிளைப் பாய்ச்சி ஒரு மனிதனின் உடலில் உருவாக்கப்பட்ட உணர்வின் துணை கொண்டு பல மாயாஜாலங்களைச் செய்து காட்டிவிட்டு ஆண்டவனையே நான் கைவல்யப்படுத்துகிறேன் என்று சொல்கிறார்கள்.

அதனின் உண்மை நிலைகளையும் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். மாயாஜாலத்தில் என்னை அங்கே அழைத்துக் கொண்டு போய்க் காட்டினார்.
1.குருநாதர் என்னைக் கட்டி அரவணைத்தார்
2.அவருடன் சேர்ந்தபின் என்னையும் ஆவியாக மாற்றுகிறார்.
3.கண நேரத்தில் அங்கே (பம்பாய்) செல்லும் போது அந்தப் பையனின் நிலையைக் காட்டுகின்றார்.

இது நடந்த நிகழ்ச்சி. நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்...!

இதைப் போன்று தான் அன்று பதஞ்சலி முனிவர் (அந்த அரசன்) அதர்வண வேதத்தைத் தனக்குள் கடைப்பிடித்து அதிலே வளர்ச்சி பெற்றவன்

மாற்று அரசர்கள் போர் முனைக்கு வரும் போது அவர்களிடமிருந்து எப்படித் தப்ப வேண்டும்...? எப்படித் தாக்க வேண்டும்…? என்று இதைப்  பரிட்சாந்தரமாகச் செய்து பார்ப்பதற்காகத் தான் கற்றுணர்ந்த உணர்வினை தன் சேனாதிபதியிடம் சொல்கிறான்.

நான் பாம்பின் ரூபமாக மாறுகின்றேன், இந்த உடலை விட்டு நான் வெளியேறிய பின் என்னுடைய மனித உடலை நீ பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக வைத்திரு…! என்று சொல்கிறான்.

“சரி” என்று சொன்னான் அந்தச் சேனாதிபதி.

போர் முரசு கொட்டி வரும் மாற்று அரசனிடமிருந்து எப்படி நாம் தப்பிக்க வேண்டும் என்று பதஞ்சலி பரீட்சாந்திரமாகப் பார்ப்பதற்காகப் பாம்பின் உடலில் சென்ற பின் அந்தச் சேனாதிபதி என்ன செய்கின்றான்…!

இது தான் நமக்கு உகந்த தருணம் என்ற நிலைகளில் கூடு விட்டுக் கூடு பாய்ந்த பதஞ்சலி முனிவரின் உடலைச் சிதைத்து எரித்து விட்டான்.

எதிரி அரசனிடம் சரணடைந்து இந்த சாம்ராஜ்யத்தை எனக்குக் கொடுத்தால் போதும் என்று அந்தச் சேனாதிபதி சொன்னான்.

அவன் ஆட்சி புரிவதற்காக வேண்டி இவனை வீழ்த்தினான் அந்தச் சேனாதிபதி. அவன் உணர்வின் சூழ்ச்சியில் சிக்கிய பதஞ்சலியோ காடு மேடெல்லாம் பாம்பாக ஊர்ந்து செல்கின்றான்.

எந்தப் பகுதியில் அந்தக் காடு மேடுகளில் பதஞ்சலி முனிவர் அலைந்தார் என்று அறிந்து கொள்ள வெறும் வேஷ்டி துண்டுடன் ஒரு கிராமத்துக்காரன் போல் சிதம்பரம் பகுதிக்குச் சென்று அவர் போன பாதைகளை எல்லாம் போய்ப் பார்த்து வந்தேன்.

அன்று நடந்த நிகழ்ச்சிகள்… அந்த உணர்வலைகள்… அது எப்படிப் பூமியில் படர்ந்துள்ளது. அதைச் சூரியனின் காந்த சக்தியை எவ்வாறு கவர்ந்துள்ளது…? என்ற நிலையை உணர்த்துகின்றார் குருநாதர்.

(இன்று இருக்கும்) சிதம்பரம் கோவிலுக்கு முன் தெப்பக்குளம் ஒன்று உண்டு. அந்த இடத்தில் விநாயகர் கோவில் ஒன்று உண்டு. அங்கே அக்காலத்தில் ஒரு பாம்புப் புற்று உண்டு.

அந்தப் புற்றுக்குள் தான் பதஞ்சலி நுழைந்து சுழன்று வந்தார். தான் செய்து கொண்ட உணர்வின் தன்மையால் அங்கே சிந்திக்கும் திறன் இல்லை.

ஆனாலும் தன் செயல்களைச் செயல்படுத்த அதற்குகந்த உடலைத் தேர்ந்தெடுப்பதற்காக வேண்டி ஊர்ந்து சென்று காடு மேடு சுற்றினார்.

அப்பொழுதுதான் சூதுவாதற்ற ஒரு மாடு மேய்ப்பவனின் அருகில் சென்று இவனைத் தீண்டி இந்த விஷத் தன்மையை அந்த உடலுக்குள் பாய்ச்சி அந்த விஷத்தின் துணை கொண்டு அவன் உடலுக்குள் சென்று அவன் உணர்வை அடக்கி அந்த உடலைச் செயல்படுத்தத் தொடங்கினான் பதஞ்சலி.

சாயங்காலம் மாடுகளுடன் சேர்ந்து அந்த உடலின் (மாடு மேய்ப்பவன்) வீட்டுக்குச் செல்லுகின்றான்.

அப்போது அவனின் மனைவி கணவன் காட்டில் மாட்டை மேய்த்து விட்டு வந்திருக்கின்றான் என்று சொல்லிப் பல பணிவிடைகள் செய்கிறாள்.

அவனுக்குத் தண்ணீர் கொடுப்பதும்… தண்னீரை மேலே ஊற்றிக் குளிப்பாட்டுவதும்…! இப்படி தொடரப்படும் போது இவனுக்குக் “கூச்சம்” வருகிறது.

ஏனென்றால் மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் புகுந்த நிலைகளில் அந்த உணர்வுகளைப் பார்க்கப்படும் போது விலகி விலகிச் செல்லுகின்றான்.

அப்போது தன் மனைவி சந்தேகிக்கும் நிலைகள் வருகிறது. ஏனென்றால் தன் கணவனை வரவேற்பதும் அவனை மகிழச் செய்வதும் ஒரு மனைவியின் கடமை என்று அவள் அவ்வாறு செய்கிறாள்.

அப்பொழுது தான் பதஞ்சலி சிந்திக்கத் தொடங்குகின்றான்…!

அரசனாக இருக்கும் போது மாற்று அரசனின் மகளைத் திருமணம் செய்து கொண்டேன்.
1.ஆனாலும் அந்த அரசிக்கு நான் அஞ்சியே வாழ வேண்டியிருந்தது
2.தான் இட்ட சட்டத்தின்படி மக்களுக்கு அஞ்சியே நான் வாழ வேண்டியிருந்தது
3.நாட்டைக் காத்திடும் தன் சேனாதிபதிக்கு அஞ்சி வாழ வேண்டியிருந்தது. (ஏனென்றால்) அவனுக்குக் கொடுத்த அதிகாரத்தின் துணை கொண்டு தன்னைத் தாக்கிடாது அவன் என்ன செய்கிறான் என்று அதற்கு உளவாளிகளை வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

இத்தனை நிலைகளுக்கும் மத்தியில் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்து எவ்வளவு பெரிய சக்தியைக் கற்றுணர்ந்திருந்தாலும் இந்த நாட்டைக் காக்கும் காவலாளியான சேனாதிபதியே “தன்னை வீழ்த்தி விட்டானே…!” என்று சிந்திக்கின்றான் பதஞ்சலி.

ஆனால் ஒரு சாதாரண மாடு மேய்ப்பவனுடைய வீட்டில் அவனுக்கு அவன் மனைவி செய்யும் சேவைகளைக் கண்ட பின் உண்மையின் உணர்வினை அறியத் தொடங்குகின்றான்.

தான் அரசனாக இருக்கும் போது கற்றுணர்ந்த ஞானிகளால் காட்டப்பட்ட வேதங்கள் ரிக் வேதம் சாம வேதம் அதர்வண வேதம் யஜுர் வேதம் என்ற நான்கு மறைகளின் பேருண்மையை அப்பொழுது உணரத் தொடங்குகின்றான்.

அவனின் உணர்வின் நினைவாற்றலில் எதை எதை இந்த உலகம் எவ்வாறு பெறுகிறது என்ற நிலையை அறிந்து கொள்ளும் ஆற்றல் வருகின்றது.

“தில்லை” – பூமி ஒரு எல்லையாக நின்று வான் வெளியில் சுழன்று கொண்டு நிற்காமல் தன் சுழற்சியின் வேகத்தால் ஈர்ப்பதும் சுழற்சியால் தனக்குள் வெப்பமாவதும் தான் கவர்ந்து கொண்ட உணர்வுகள் விளைவதும் எப்படி…? என்ற பேருண்மைகளை அறிகின்றான்.

அதற்குத் “தில்லை நடராஜா...!’ என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றான். இந்தப் பூமி நின்று விட்டால் நாம் என்ன கதியாவோம்,,,? என்று இந்த உணர்வின் தன்மையை வெளிப்படுத்தும் போது தான் “திருமூலர்” என்ற பெயர் அவருக்கு வருகிறது.

பூமியின் செயலாக்கத்திருந்து உரு பெறும் உணர்வின் அணுக்களின் செயல்கள் விண்ணுலக ஆற்றலால் எவ்வாறு பெற்றது என்றும் அங்கே வெளிப்படுத்துகின்றான்.

உலகம் உருவாவதற்கு முன் பேரண்டத்தில் இலகுவான வெப்பத்தின் தன்மை தான் ஆதியிலே மூலமாக இருக்கிறது.

அந்த வெப்பத்தில் ஆவியாக உரு பெற்று அமைதி கொண்ட ஆவியாக அது வளர்ச்சி பெறப்படும் போது நாளாக ஆக அதனின் தன்மை விஷத் தன்மையாக மாறுகிறது.

அந்த விஷத்தன்மை அடைந்த பின் புதிதாக உருவாகும் ஆவியின் தன்மையைத் தாக்கி வெப்பமாக மாற்றுகிறது. வெப்பமாக மாற்றிய பின் அணுவாக மாறுகிறது.

1.விஷத்தின் தாக்குதலை ஆதிசக்தி என்றும்
2.தாக்குதலால் உருவாகும் வெப்பத்தைப் ஆதிபராசக்தி - எல்லாவற்றையும் உருவாக்கும் நிலை என்றும்
3.வெப்பத்தின் தன்மை கூடும் போது ஈர்க்கும் காந்தம் உருவாவதை ஆதிலட்சுமி என்றும்
4.ஆதிபராசக்தி என்றும் ஆதிசக்தி என்றும் ஓர் அணுவின் தன்மையை
5.அந்த இயக்கத் தொடரை திருமூலர் உணர்த்துகின்றார்.
(ஆதியிலே உருவான நிலை எப்படி என்பதைத்தான் அவர் வெளிப்படுத்தினர் – தில்லை இரகசியம் என்பது)

இவ்வழியில் அணுக்களின் சேர்க்கையால் இந்த பூமி உருவானது உணர்வுக்குத்தக்க அணுக்கள் மாற்றமானது என்ற பேருண்மையைப் பாடுகிறார்.

1.பற்பல உணர்வுகள் மோதுண்டு மோதுண்டு
2.அதில் அணுக்களின் தன்மை பெருகப் பெருக 
3.அணுக்கள் ஒவ்வொன்றும் தனக்குள் கவர்ந்த உணர்வுகள் மாற மாற
4.ஒன்றைக் கண்டு மற்றொன்று அஞ்சி ஓடுவதும் மற்றொன்றோடு மோதுவதும்
5.மோதலில் ஏற்படும் இணைந்து வெப்பமாவதும் இரண்டு சத்தும் இரண்டறக் கலப்பதும்
6.அணுக்களின் வளர்ச்சியும் அணுக்களில் மாற்றம் எவ்வாறு உருவாகிறது என்ற நிலைகள் அங்கே உணர்த்துகின்றான்.

அதிலே தோன்றிய அந்த அணுக்களின் தன்மை தான் ஆவியாகி மேகமான பின் மேகத்துக்குள் இந்த அணுக்களுக்குள் போர் முறை ஆகப்படும் போது தான் நீராக மாறுகின்றது. நெருப்பிலிருந்து தான் “நீர் தோன்றியது…!” என்று உணர்த்துகின்றார் திருமூலர்.

அந்த நீருக்குள் அணுக்கள் சிக்கி எடை கூடிய நிலையில் ஓடும் போது அதனுடைய உராய்வில் மீண்டும் இந்த நீர் ஆவியாக மாறி இணைந்து கொண்ட உணர்வுகள் ஒன்றாகச் சேர்த்து ஒரு பரமாகிறது. “பரம்பொருள்” ஆனதென்று உணர்த்தினார் திருமூலர்.

ஒரு அமைதி கொண்ட மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்தபின் தான் கற்றுணர்ந்த அனுபவத்தை அந்த அகஸ்தியன் உணர்வை நுகர்ந்து பேருண்மைகளை வெளிப்படுத்துகின்றான்.

மனித வாழ்க்கையில் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய அகஸ்தியன் துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமான நிலையும் அதன் வழியில் பின்பற்றிச் சென்ற சப்தரிஷி மண்டலங்கள் எவ்வாறு இருக்கிறது என்ற நிலையையும் திருமூலர் வெளிப்படுத்திக் காட்டுகின்றார்.

அவர் வெளிப்படுத்தியதை மாற்றித் விட்டு திருமூல மந்திரம் என்று இவர்களுக்கு உகந்த நிலைகள் கொண்டு “மந்திர ஒலியிலே...” சாடி விட்டார்கள்.

அந்தத் திருமூலரின் சமாதியைத் தான் தில்லையம்பதியில் சிதம்பர ரகசியம் என்று இன்றும் காட்டிக் கொண்டு பொருள் தேடுகிறார்கள். பணத்திற்காகத் தில்லை ரகசியம் என்று காட்டுகிறார்கள்.

Thursday 27 February 2020

உடலுக்குள் பித்தம் எதனால் அதிகமாகின்றது...? அதிகமானால் ஏற்படும் விளைவுகள் என்ன...? அதைத் தடுப்பது எப்படி...?


 குடும்பத்தில் மனைவி குழந்தை மேல் அன்பிருந்தாலும் அந்த அன்பு கொண்ட நிலையில் சிறிது குறைகள் வந்து விட்டால் மகிழ்ச்சி இல்லாது போகின்றது.

அதற்கு என்ன காரணம்...?

கணவன் தொழிலின் நிமித்தம் வெளியிலே வெறுப்படைந்தால் அதே உணர்வு தாக்கப்பட்டு மனைவி மீதும் வெறுப்படையும் தன்மை வருகின்றது.

வெறுப்பான உணர்வுடன் வீட்டுக்குள் வரப்படும் போது மனைவி ஆகாரத்தைச் சுவையாக செய்து வைத்திருந்தாலும் சுவையான உணவை ரசித்து சாப்பிடும் நிலை இழக்கப்படுகின்றது.
1.அப்போது சோர்வடைந்து “என்ன சாப்பாடு இது...?”
2.வெளியிலேயும் ஒரே சிக்கலாக இருக்கின்றது...
3.நாம் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாரித்தாலும் கூட
4.வீட்டில் சாப்பாடு கூட மோசமாக இருக்கிறது என்று
5.இப்படிக் குறையான உணர்வுகளைச் சுவாசித்து
6.நம்மை அறியாமலே அன்பு கொண்ட மனைவியும் கூட வெறுக்கும் தன்மை வருகின்றது.

ஆனால் நாம் அல்ல....!

நாம் எடுத்து கொண்ட நல்ல உணர்வுகளைச் சந்தர்ப்பத்தால் அது மறைக்கப்படும் போது விஷம் கலந்த அமிலங்கள் கலக்கப்படும் போது சுவை மிக்க உணவை ருசி இல்லாத நிலைகளாக மாற்றி விடுகின்றது.

பித்தம் அதிகமாகிவிட்டால்... நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் வாந்தி வரும். ருசியான உணவை நீங்கள் உட்கொண்டாலும் அதை உங்கள் உடல் ஏற்க  மறுக்கின்றது. உடல் வலு பெற வேண்டும் என்றாலும் முடியாத நிலை செய்கின்றது.

இதற்கெல்லாம் காரணம் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் தான்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உயிரிலே பட்டு உணர்ச்சிகளாக மாறி வாயிலே அதற்குத் தகுந்த அமிலமாக (உமிழ் நீராக) மாறுகின்றது.

அந்த உமிழ் நீர் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலக்கின்றது. அந்த  உணர்வுக்கொப்ப தான் (உமிழ் நீர்) தான் ஜீரணிப்பதும் ஜீரணமற்ற நிலை உருவாவது.

சலிப்பும் சஞ்சலமுமாக இருக்கும் பொழுது நல்ல சுவையான உணவை நீங்கள் உட்கொண்டால் ஜீரண சக்தியே குறைகின்றது.

கஷ்டப்பட்டு உழைத்து வரும் நிலையில் நல்ல உணவைச் சாப்பிட்டு உடல் வலு பெற வேண்டும் என்று எண்ணிச் சாப்பிட்டாலும்
1.சலிப்பு சஞ்சலம் என்ற உமிழ் நீர் கலந்து
2.ஜீரணிக்கும் சக்தியை இழந்து புளித்த ஏப்பம் வரும்
3.புளித்த ஏப்பம் வந்த பின் வாய்வாகி வயிறு உப்பிசமாகும்
4.வயிறு உப்பிசமாகி வாயுவின் தன்மை நுரையீரல்களில் அதிகமாகி மூச்சுத் திணறல் போன்று வரும்.
5.நமக்கு ஆயாசமாக வரும்.

ஆனால் நாம் தவறு செய்தோமா...? என்றால் இல்லை.

கடைசியில் குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் இருக்கும் அன்பைக் குறைத்து மகிழ்ச்சியைக் குறைக்கச் செய்து நம் உடலையும் நலியச் செய்து விடுகிறது.

இதைப்போல சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எப்படியெல்லாம் இயக்குகின்றது என்ற நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு உணர்த்திக் காட்டினார்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றிட என்ன செய்ய வேண்டும்...?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சிறு குடல் பெருங்குடல் முழுவதும் படர்ந்து சிறு குடலையும் பெருங்குடலையும் உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா.....! என்று
1.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
2.அந்த ஜீரண உறுப்புகள் பலவீனமடையாதபடி உற்சாகப்படுத்தி
3.சாப்பிடும் ஆகாரத்தை ஜீரணிக்கும் ஆற்றல்கள் பெற வேண்டும்
4.ஆகாரத்தில் உள்ள சத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இதைப் போன்று நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

அப்பொழுது சந்தர்ப்பத்தால் நுகர்ந்த தீமையான உணர்வுகளை நம் உடல் உறுப்புகள் வடிகட்டும் திறன் பெறும். நல்ல உமிழ் நீராகச் சுரக்கச் செய்யும். சாப்பிடும் ஆகாரமும் சுவையுள்ளதாக மாற்றிவிடும்.

உடல் நலம் பெறுவோம். மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவோம். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படுத்துவோம்.

மணிக்கணக்கில் உட்கார்ந்து உட்கார்ந்து செய்வதற்குப் பெயர் தியானம் அல்ல – “அது தியானம் ஆகாது…!”


வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் தியானமிருக்க வேண்டும். அதாவது வாழ்க்கையே தியானம் ஆக்க வேண்டும்.

எப்படி…?

உட்கார்ந்து உட்கார்ந்து மணிக்கணக்காகச் செய்து கொண்டு இருப்பது தியானம் அல்ல. இது தியானம் ஆகாது.

ஏன்…?

நீங்கள் தியானத்தை முடித்துவிட்டு வேறு வேலைக்குப் போகின்றீர்கள். அடுத்தாற்போல தீடீரென ஒரு ஆக்ஸிடென்டோ அல்லது ஒரு மாடோ உங்களை விரட்டிக் கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள்…!

“ஆ…” என்று பயந்தால் அது உள்ளே வந்துவிடும். பயத்தையும் அதிர்ச்சியையும் உடலுக்குள் உருவாக்கி விடும்.
1.இந்த உணர்வு அதிகமானால் அடுத்தாற்போல
2.நீங்கள் தியானத்தில் உட்கார முடியாது.
3.எந்த ஒரு அதிர்ச்சியான செய்தியை கேட்டாலும் இது முன்னாடி நிற்கும்.
4.அப்பொழுது…, நீங்கள் எப்படித் தியானம் எடுக்க முடியும்…!


எதுவாக இருந்தாலும் எத்தகைய நிலை வந்தாலும் அப்போதைக்கு அப்போது துடைத்துப் பழகினால் தான் அடுத்து உங்களைத் தியானத்திலே உட்காரவிடும்.

இல்லை என்றால் நிச்சயம் தியானத்திற்கு வர முடியாது.

இந்தக் கான்சன்ட்ரேசன் (CONCENTRATION) அது… இது...! என்று ஏதேதோ ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஒன்றும் நடக்காது….

 நீங்கள் வருடக் கணக்காகத் தியானத்தை எவ்வளவு வளர்த்தாலும்..,
1.நான் இவ்வளவு காலம் செய்தேன்…!
2.அப்படித் தியானம் செய்து கொண்டு வந்தேன்… அப்பொழுதெல்லாம் நன்றாக இருந்தது
3.இப்பொழுது என்னால் “முடியவே இல்லை…,” என்பார்கள்.

ஏனென்றால் எதிர்பாராத விதமாக அதிர்ச்சியோ பயமோ கோபமோ குரோதமோ மற்றதோ எடுத்தால் அது வலுவானது. நுகர்ந்தது நம் ஆன்மாவில் கலந்து அது வலிமை பெறுகின்றது. அதனால் உங்களால் முடியாமல் போய் விடுகின்றது.

நான் செய்தேனே… போய்விட்டதே…! செய்தனே… போய்விட்டதே…! என்று வேதனைப்பட்டு விஷத்தைத் தான் உங்களால் வளர்க்க முடியுமே தவிர அதைப் போக்க முடியாது. (இது மிகவும் முக்கியமானது)

ஒவ்வொரு நொடியிலும் நாம் கையில் அழுக்கு படுவதைத் துடைப்பது போலத்தான்
1.நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்போது தீமையைக் காணுகின்றீர்களோ
2.அப்பொழுதெல்லாம் நான் (ஞானகுரு) கொடுத்த அருளை வைத்து
3.”ஈஸ்வரா…….!” என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்
4.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் இணைத்து விடுங்கள்
5.உள்ளே புகாது தடுத்து விடுங்கள்
6.அந்தப் பேரோளியைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்
7.அப்புறம் உடல் முழுவதும் படர்ந்து உடலிலுள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்துங்கள்
8.இது வளர வளர இந்த ஆன்மாவிலிருக்கும் தீமைகளைத் (எந்தத் தீமையை நீங்கள் நுகர்ந்திருந்தாலும்) தள்ளிக்கொண்டே போகும்
9.உங்கள் ஈர்ப்பு வட்டத்திற்கு வெளியில் போய் விட்டது என்றால் சூரியன் எடுத்துக் கொண்டு போய் விடும்
10.ஆன்மா பரிசுத்தமாகும்…!

அதனால் தான் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் கூடக் கொஞ்ச நேரமாவது இதை எடுத்தீர்கள் என்றால் ஆன்மா தூய்மை அடைவதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்வீர்கள்.
1.எந்தக் கவலை வந்தாலும்
2.எந்தத் தொல்லை வந்தாலும்
3.எந்தச் சங்கடமாக இருந்தாலும்
4.நீங்கள் மேலே சொன்ன மாதிரி கூட ஒரு ஐந்து நிமிடம் எடுங்கள்.

மேலே வானை நோக்கிக் பாருங்கள். கண்களைத் திறந்து அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

கண்களை மூடுங்கள். உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். இது கொஞ்ச நேரம் இப்ப்டிச் செய்து அதைக் கூட்டிப் பாருங்கள்.

இது உங்களால் சாத்தியம் ஆகுதா…? இல்லையா…? என்று பாருங்கள். இப்படித்தான் வாழ்க்கையே தியானமாக்க வேண்டும்.

அப்போதைக்கப்போது நாம் துடைக்கவில்லை என்றால் உடலுக்குள் போய் அந்தந்த அணுக்கள் பிறந்து விடும். அப்புறம் ஆன்மாவில் அந்த அழுத்தம் கூடி விடும்.
1.தியானத்தில் உட்கார்ந்தால் அவன் அப்படிப் பேசினான்…
2.இந்த மாதிரி அதிர்ச்சி ஆனது…! என்ற அந்த நிலை தான் வரும்.

ஆனால் அதிர்ச்சிகள் மீண்டும் வந்தால் யாம் சொன்ன முறைப்படி உடனடியாக எடுத்து இதை எடுத்து நீங்கள் மீள வேண்டும்.

உங்களால் முடியும். "இது தான் உண்மையான தியானம்…!"

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்த அந்த அருள் சக்திகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். திரும்ப எண்ணும் போது அந்த உணர்வின் இயக்கமாக உங்களுக்குள் வரும்.
1.அந்த "அரும் பெரும் சக்தியை” உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
2.ஒவ்வொரு நொடியிலும் உங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
3.உங்கள் வாழ்க்கையே தியானமாகின்றது…!

Wednesday 26 February 2020

அற்புதம்” என்பது எது...?


ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை உங்களுக்குத் திரும்பத் திரும்ப பல கோணங்களில் சொல்லிக் கொண்டே வருகின்றோம். ஆனால் உபதேசத்தைக் கேட்கும் சிலர்
1.சாமி (ஞானகுரு) சொன்னார்… கேட்டோம்
2.நல்ல விஷயங்களைச் சொன்னார்…! என்று அந்த அளவில் நிறுத்தி விடுகிறார்கள்.

நெற் பயிரை விவசாயம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு இந்த இந்த உரங்கள் இட வேண்டும். பயிர் வளர்ந்து வரும் வேளையில் இந்தெந்தக் காலங்களில் இதை இதைச் செய்ய வேண்டும் என்று சொன்ன பிற்பாடு…
1.“ஆஹா… பிரமாதமாகச் சொல்லி விட்டார்…!” என்று
2.அதைப் புகழ்ந்து பேசினால் எப்படி இருக்கும்…?

நெல் விளைவதற்கு இன்னென்ன உரம் இட்டால் அது நலமாக இருக்கும் என்று விளக்கிச் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு
1.“ஆஹா…! எப்படிச் சொன்னார் தெரியுமா…?” என்று மனதில் மட்டும் வைத்து விட்டு…
2.நெல்லுக்கு வேண்டிய உரத்தை இடாது…
3.அந்தந்தக் காலத்திற்கு நீரை விடாது…
4.அந்தந்தக் காலத்தில் களையை நீக்காது விட்டு விட்டால்…
5.நெல் எப்படி வரும்…?

தியானத்தைக் கடைப்பிடிக்கிறோம் என்று சொல்வோர் பலருடைய நிலைகள் இதில் தான் உள்ளது. என்னைப் புகழ்ந்து பேச வேண்டும் என்ற நிலையில்
1.ஆஹா… எங்கள் சாமி அற்புதமாகச் சொல்லுகின்றார்…!
2.அவர் சொல்வதை நான் என்னவென்று சொல்வேன்…!
3.என்ன அழகாகச் சொல்கிறார் என்று போற்றுவார்கள்… புகழ் பாடுவார்கள்…!
4.சாமியை யாராவது தவறாகச் சொன்னால் அவர்களுக்குக் கோபமும் வரும்…!
5.சாமி இப்படித்தான் சொன்னார்… உனக்கென்ன தெரியும்…! என்று சண்டையும் போடுவார்கள்…!

ஆனால் யாம் கொடுக்கும் உபதேசத்திற்குள் இருக்கும் மெய்ப் பொருளைக் காணாத நிலையில் நமக்கு நாமே நல்ல உணர்வின் தன்மையை மறைத்து விடுகின்றோம்.

இது தான் உண்மை.

மனித வாழ்க்கையில் தீமைகளை அகற்றும் பேரானந்த நிலை பெறும் ஆற்றல் மிக்க சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்று குருநாதர் காட்டிய வழியில் 20 வருடம் தவம் இருந்து அந்த உண்மையை உணர்ந்து கொண்டோம்.

மகரிஷிகள் கண்டுணர்ந்த அந்த மெய்ப் பொருளை நீங்கள் காணும் வண்ணம் அதனை விளைவித்து அருள் ஞான வித்தாக ஒவ்வொரு கால கட்டத்திலும் விதைத்துக் கொண்டே இருக்கின்றோம்.

அந்தக் காலமறிந்து பருவமறிந்து வரும் தீமைகளை அகற்றி எப்படி வளர வேண்டும் என்ற நிலைகளை உங்களுக்குள் உபதேசித்துக் கொண்டே இருந்தாலும் நீங்கள் எத்தனை பேர் அதைப் பெற்று வளர்த்துக் கொண்டுள்ளீர்கள் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

நமக்குள் கடவுளாக வீற்றிருந்து உள் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசன்
1.நாம் எண்ணியதை எல்லாம் இறையாக்கி
2.நாம் எண்ணியதை நமக்குள் உருப் பெறச் செய்து
3.எதை இறையாக்கினோமோ அதனின் செயல் தெய்வமாகச் செயலாக்குகின்றது.

எனவே நாம் எதை எண்ண வேண்டும்…? எதனின் உணர்வின் தன்மையை நமக்குள் செயலாக்க வேண்டும்…? என்பதைத் தெளிவுற எடுத்துக் கொள்ளுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை அனுபவ ரீதியாகப் யாம் பெற்றுணர்ந்ததை உங்களுக்குள் அருள் ஞான வித்தாக விளைய வைத்து அதைப் பெறும் தகுதியை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே இந்த உபதேசம்.

உங்களை ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஈசனுக்கு மகிழ்ச்சி பெறும் நிலைகளாக மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் எண்ணத்தால் உங்களுக்குள் உருப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று அதன் துணை கொண்டு
1.தீமையான நிலைகளைக் குறைத்து
2.வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கி
4.மெய்ப் பொருளைக் கண்டுணரும் உணர்வுகள் வளர்ந்து
5.மெய் ஞானத்தின் நிலைகள் வளர்ந்து
5.மெய் ஞானிகளுடன் ஒன்றி
6.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
7.பிறவா நிலை என்ற பெரு நிலையை அடைய முடியும்.

நீங்கள் ஒவ்வொருவரும் அந்த நிலையை அடைவது தான் அற்புதம்…!

Tuesday 25 February 2020

தெய்வங்களுடன் சேர்த்துப் “பாம்பையும்” காட்டியுள்ளார்கள் ஞானிகள் – ஏன்…?

ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ள சாஸ்திரங்கள்படி பார்த்தால் பெரும் பகுதியான தெய்வங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பாம்பினை இணைத்தே காட்டியிருப்பார்கள். ஏன்…!

விநாயகர் கோவிலில் பார்த்தால் இரண்டு பாம்பும் பிணைந்து இருப்பதாகப் போட்டு இருப்பார்கள். அதனின் பொருளை நாம் அறிந்துள்ளோமா…?

நமக்குள் இருக்கும் உணர்வுக்குள் ஒன்றுக்குள் ஒன்று கலந்துள்ள நஞ்சின் தன்மை
1.எதனின் நஞ்சின் தன்மை அடைகின்றதோ
2.அதனின் தன்மை கொண்டுதான் நம்மை அடக்கி ஆள்கின்றது
3.ஒரு விஷத்தின் தன்மை இன்னொரு விஷத்தின் தன்மையை அடக்கப்போகும் போது
4.அதனின் தன்மை எப்படி ஒடுங்குகின்றது…?
5.ஓர் உணர்வின் (அணுவின்) தன்மை எங்கே…, அது எப்படிப் பிணைகின்றது…? என்ற தத்துவத்தைத்தான்
6.பாம்புகளாக அங்கே காட்டி இருக்கின்றார்கள்.

அன்றைய ஞானிகள் சாஸ்திரங்களாகக் கொடுத்த மெய் உணர்வுகள் காலத்தால் மறைந்துவிட்டது. மறைந்த உண்மைகளைத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உணர்த்திக் கொண்டேயுள்ளோம்.

நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக உள்ளான். அவனைப் பின்பற்றியவர் அனைவரும் சப்தரிஷி மண்டலமாக துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டுள்ளார்கள்.

அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியை நீங்கள் அனைவரும் பெற்று இருள் சூழ்ந்த நிலைகளில் இருந்து மீள வேண்டும். ஒருவருக்கொருவர் பிரித்தாளும் பகைமை உணர்வுகளை வெல்லும் சக்தியாக நீங்கள் வளர வேண்டும்.

நீங்கள் விடும் மூச்சலைகள் இங்கே கலந்து நாட்டிலே திரியும் நச்சுத் தன்மைகள் மறைய வேண்டும். மெய்ப் பொருள் காணும் நிலையாக வளர்ந்து பேரருள் பேரொளியாக வளர வேண்டும் என்ற நிலைக்கேதான் குருநாதர் காட்டிய வழியில் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

1.எனக்குள் இருந்த இருந்த இருளை நீக்க…
2.கல்வி அறிவு அற்றவனுக்கு... மூடனாக இருந்த எனக்கு (ஞானகுரு)
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் கண்டுணர்ந்த இயற்கையின் உண்மைகளை
4.உபதேசத்தின் வழி கொண்டு உணர்த்திக் காட்டினார்.

என் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுவின் தன்மை ஒவ்வொன்றுக்கும் அவர் உபதேசித்த அருள் உணர்வு தான் அதற்குள் இருந்து ஞானத்தின் நிலைகளாக இயக்கி அதன் மூலம்
1.என்னால் மெய் உணர்வுகளை நுகர முடிந்தது.
2.மெய் ஒலியின் அலைகளைப் பரப்ப முடிகின்றது.
3.உங்களுக்கும் குருநாதர் காட்டிய வழியினை உபதேசிக்க முடிகின்றது.

இதைப் படிப்போர் அனைவரும் இதைப் பின்பற்றிப் பாருங்கள்.
1.உங்களை நீங்கள் நம்புங்கள்.
2.உங்கள் உயிரின் தன்மை ஈசனாக மதித்துப் பழகுங்கள்.
3.உங்கள் உடலை அவன் படைத்த கோயிலாகவும் சிவனாகவும் மதியுங்கள்.
4.மனிதன் என்ற தன் நிலையை அடைய முடியும்.

உங்கள் உடலான ஆலயத்திற்குள் எண்ணிலடங்காத குணங்கள் உண்டு. அது அனைத்திலும் உயர்ந்த தெய்வ நிலைகளினுடைய நிலைகளைச் சேர்த்து உலகைக் காத்திடும் உத்தம மெய் ஞானிகளாக வளர வேண்டும்.

ஒரு குழம்பிற்குள் பல பொருகளைச் சேர்த்து ருசியாக ஆக்கி மகிழ்ச்சியாக எப்படி உட்கொள்கின்றோமோ அதைப் போல பல உணர்வுகளின் தன்மையைப் பலவாறு பல நிலைகள் பெற்றாலும் அவை அனைத்தும் அடக்கி இந்த உணர்வின் தன்மை ஆற்றல் பெற்ற அந்த அகஸ்தியனுடைய அருள் ஒளியினுடைய நிலைகளை அனைவரும் பருக வேண்டும்.

அந்த அகஸ்தியன் உலகைச் சமப்படுத்தியது போல ஒளியின் தன்மையாக நமக்குள் இருக்கும் எண்ணங்கள் சுடர் விட்டுப் பிரகாசிக்க வேண்டும்.

நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளில் துன்பங்கள் அகன்று மகிழ்ச்சியின் நிலைகள் தாண்டவமாட வேண்டும்.
1.இந்த இச்சையின் சக்தியே
2.குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு எனக்குள் அது கிரியையாகி
3,என்னை இயக்கிச் சொல்லாக வெளிவருகின்றது.

நீங்கள் ஒவ்வொருவருமே துருவ நட்சத்திரமாக ஆக வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையும் குருநாதர் ஆசையும் ஆகும். எமது அருளாசிகள்.

“அகஸ்தியரை எண்ணித் தியானித்து…” உங்கள் ஊரில் நீர் வளத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள்…!


மக்கள் சங்கடமான நிலைகளில் இருக்கும் பொழுது அந்த ஊர்களில் மழை பெய்யாதுகாரணம்சங்கடமான உணர்வின் தன்மை மேகங்களில் கலக்கப்படும் பொழுது மழை மேகங்கள் கலைந்து விடுகின்றன.

பக்கத்து ஊரில் மழை பெய்யும்ஆனால் இங்கே மழை பெய்யாதுஇதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட உணர்வுக்குத்தக்க மழை மேகங்கள் கூடும் அல்லது விலகும்.

வேதனையின் உணர்வுகள் அதிகமாகும் பொழுது மழை பொய்த்து தரித்திரமே வளரும்இவைகளையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால்...
1.நாம் ஒவ்வொருவரும் நமது ஊர் நன்றாக இருக்க வேண்டும்.
2.நமது நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்களை
3.நாம் முழுமையாகப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

நாட்டில் வாழ்வது யார்..நாம் தானே…!

நாட்டில் ஜாதி மதம் இன பேதங்களை வளர்த்து நாம் சண்டையிடும் பொழுது இதனின் உணர்வுகள் மேகங்களை கலைக்கச் செய்து மழையில்லாமல் செய்து விடுகின்றது.

ஒரு முறை குருநாதர் அகஸ்தியர் தியானம் செய்த மலைப்பகுதிக்கு எம்மைப் (ஞானகுரு) போகச் சொன்னார்.

அகஸ்தியர் வாழ்ந்த இடமெல்லாம் நீர் சக்தி பெற்றதுஅவருடைய பாதம் பட்ட இடமெல்லாம் மேகத்தைக் கவர்ந்து நீராக மாற்றும் தன்மை வாய்ந்தது.

குருநாதர் போகச் சொன்ன இடத்தில் மலை உச்சியில் தண்ணீர் இருந்ததுஆனால்மலைக்குக் கீழே தண்ணீர் இல்லை.

மலை உச்சியில் தண்ணீர் இருக்கிறதென்றால் காரணம் என்ன...?

குருநாதர் எம்மை ஒரு இடத்தில் அமரச் சொல்லி சங்கடமாக வெறுப்பாக மற்றவர்களை மோசமாக நினைத்துக் கொண்டே இரு…! என்று கூறினார்.

யாமும் குருநாதர் சொல்லியவாறு எண்ணிக் கொண்டிருந்தோம்.

அது சமயம் மேகங்கள் வருகின்றனவந்த மேகங்கள் பிரிந்து சென்றனஈரப்பசையே அற்றுப் போகின்றதுஇப்படி மனிதர்க்கு உண்டான உணர்வுகள் மழை மேகங்களை விலக்குகின்றது என்பதை குருநாதர் எமக்கு அங்கே தெளிவாக உணர்த்தினார்.

இவைகளையெல்லாம் யாம் அறிவதற்காகக் காடு மலை என்று பல பகுதிகளுக்கு அலைந்தோம்ஆனால் யாம் பெற்ற பேருண்மைகளை உங்களிடத்தில் எளிதாகப் பதிய வைக்கின்றோம்.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் எந்தெந்த ஊர்களில் இருக்கிறீர்களோ அந்தந்த ஊரில் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

1.நீங்கள் உங்களிடத்தில் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வுகளைப் பெருக்கி
2.ஊர் மக்கள் அனைவரும் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்
3.ஊர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

இதன் தொடர் கொண்டு உங்கள் ஊரில் மழை சீராக இருக்கும்விவசாயமும் செழித்து வளரும். ஆகவே
1.அகஸ்தியரை எண்ணித் தியானித்து
2.நீர் வளத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள்…!