Friday 31 January 2020

எந்த வேண்டுதலும் வேதனையுடன் கேட்கக் கூடாது...! கேட்டால் பலன் கிடைக்காது – “நல்லதை விரும்பியதாக நம் வேண்டுதல் இருக்க வேண்டும்”


நல்லது நடக்க வேண்டும் என்றால் அதை எப்படிக் கேட்க வேண்டும் என்று பல முறை சொல்லி இருக்கின்றேன் (ஞானகுரு).

என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். என் பையன் உடலுக்கு நன்றாக இருக்க வேண்டும். என் தொழில் நன்றாக இருக்க வேண்டும். விவசாயம் நன்றாக இருக்க வேண்டும். பார்ப்போர் நலமாக இருக்க வேண்டும். இப்படி உங்களால் கேட்க முடியாதா..?

ஏனென்றால் நீங்கள் கேட்கக்கூடிய உணர்வுகள் எதுவோ உயிரில் பட்டவுடனே அந்த உணர்ச்சிகள்தான் உங்களை ஆளுகின்றது. அதுவே உங்கள் உடலில் இயங்குகின்றது. உங்கள் உடலில் பதிவாகின்றது. அதனின் செயல்தான் படுகின்றது.

ஒருவர் மிகுந்த வேதனையுடன் சிரமப்படுகின்றார் என்பதைப் பார்த்துவிட்டு அடுத்து எந்தக் காரியத்தைச் செய்தாலும் சிந்தனை இல்லாது போய்விடுகின்றது.

ஒருவன் நம்மிடம் கோபத்துடன் பேசிக் கொண்டு இருந்தான் என்றால் அந்தக் கோபமான உணர்வுகளை நுகரப்படப் போகும் போது அதே மாதிரி சிந்தனை இழந்துவிடுகின்றது.

அந்த உணர்வுடன் ஒரு ரோட்டிலேயே நடந்து போனால் சிந்தனை இழந்த நிலையில் மேடு பள்ளம் தெரியாமல் கீழே விழுவார்கள்.

ஒரு வியாபாரத்திற்கே போகின்றோம் என்று சொன்னால் அந்த வியாபாரத்தைச் சரியான முறையில் கவனிக்க முடியாது.

இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடப்பதால் “தீமைகளை எண்ணுவதை முதலில் மறந்து பழகுங்கள்…!” என்று அடிக்கடி சொல்கின்றோம்.

சாமி காப்பாற்றும்... சாமியார் காப்பாற்றுவான்... ஜோசியம் காப்பாற்றும்.... ஜாதகம் காப்பாற்றும்... மந்திரம் காப்பாற்றும் என்று சொல்வதெல்லாம் எதுவும் உங்களைக் காப்பது இல்லை.

ஜோசியக்காரன் உங்களுக்குக் கஷ்டம் இருக்கிறது.. உங்கள் ஜாதகத்தில் கண்டம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு தான் இருப்பான். அதைப் பதிவு செய்து கொண்டால் இதைத்தான் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியது வரும்.

1.அவன் எடுத்து கஷ்டத்தின் உணர்வைச் சொல்வான்
2.நீங்கள் கேட்கும் போது உயிரிலே பட்டபின் அந்த உணர்ச்சிகள் உங்களை ஆளத் தொடங்கும்.
3.அவன் சொன்ன கஷ்டத்தைத் தான்  நீங்கள் அனுபவிக்க வேண்டும்.

ஆனால் மனிதனுடைய ஆறாவது அறிவை முருகனாகக் காண்பித்து “ஓ..ம்..” என்ற பிரணவத்தைச் சிவனுக்கே ஓதினான் என்று சிவ தத்துவத்தில் கூறப்படுகிறது.

ஒரு மனிதன் வேதனைப்படுவதைக் கண்ணில் பார்க்கின்றோம். பார்த்தவுடனே அந்த உணர்வு “ஓ...ம் என்று நமக்குள் பிரணவமாகி “ம்..” என்று அதை நம் உடலாக்குகின்றது. (திடப்பொருள் உடல் - சிவம்).

இந்த உடலில் விளைந்தது தான் ஆறாவது அறிவு. ஒரு நோயாளியைப் பார்த்து அந்த வேதனை என்ற உணர்வு நாம் நுகர்ந்தோமென்றால் அந்த வேதனையான உணர்வு உடலாகி அந்த வேதனையான சிவமாக மாறும்.

வேதனை நீக்கக்கூடிய உணர்வுகளை எத்தனையோ சரீரத்திலிருந்து பெற்று பெற்று
1.தீமை நீக்கக்கூடிய அறிவு ஆறாவது கொண்ட மனித உடல்  பெற்ற நாம்
2.மீண்டும் மீண்டும் தீமைகளையே நமக்குள் இழுத்துக் கொண்டிருந்தால்
3.இதிலிருந்து என்றைக்கு நாம் மீள்வது...? என்றைக்கு நாம் தெளிவாகுவது...?

பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்....! ஓம் என்ற பிரணவத்திற்கே சிவனுக்கே ஓதினான்...” என்று சொன்னால் நம் ஆறாவது அறிவு என்ன செய்கின்றது...?

நோயாளியைப் பார்த்தவுடனே அந்த நோயின் உணர்வு வந்து நாம் வேதனைப்படுகிறோம். கோபப்படுகின்றவனைக் கேட்டால் நாமும் கோபப்படுகின்றோம்.

இந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் வந்தால் இது பூராம் ஓ...ம் நமச்சிவாய..! ஓ...ம் நமச்சிவாய...! என்று இரத்தத்தில் அந்தக் கெட்டது பூராம் சேர்ந்து கொண்டே இருக்கும். இதை என்றைக்கு மீட்டுவது...?

இதிலிருந்து விடுபட வேண்டும் என்று சொல்லி எத்தனையோ தரம் நான் சொல்கிறேன். எம்முடைய உபதேசத்தைக் கேட்டவர்களும் சரி தெரிந்தவர்களும் சரி நான் மறந்து விட்டேன் என்று சொல்கிறார்கள்...!

நல்லதாக வேண்டும் என்று கேட்பதற்கு மனசு வராதா....?

1.எங்கள் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேட்க மனது வராதா...?
2.எங்கள் பிள்ளைகள் நல்லவர்களாக வளர வேண்டும் என்று கேட்க மனது வராதா...!
3.என் பையன் எங்கள் சொல்படி கேட்டு நடக்க வேண்டும் என்று கேட்பதற்கு உங்களுக்குத் தெரியாதா...?

ஒவ்வொரு நிமிடமும் நாம் எண்ணுவது தான் நம் உடலுக்குள் சேர்கின்றது. நீங்கள் வேதனையான உணர்வை எடுத்தால் அதை  “ஓ..” என்று உயிர் இயக்கி உங்கள் இரத்தங்களிலே கலக்கச் செய்து விடுகின்றது.

உயிரிலே படும் போது ஈஸ்வர லோகம். நம் இரத்தத்திலே கலக்கும் போது இந்திரலோகம். அதாவது எந்தக் குணத்தை எடுத்தோமோ அதனின் அணுக் கருவாகிவிடுகின்றது.

திரும்பத் திரும்ப அதே வேதனையை எடுத்தோம் என்றால் நம் உடலில் கை கால் குடைச்சல் தலை வலி மேல் வலி சிந்திக்கும் தன்மை இழக்கக்கூடிய பிரம்மமாக மாறிவிடுகிறது.

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினோம் என்றால் பூமியின் ஈர்ப்பின் துணை கொண்டு காற்றிலிருந்து தன் இனமான சத்தை அது எடுத்துச் செடியாக விளைகின்றது

அதைப் போன்று தான் ஒரு வேதனையான உணர்வை எடுத்து நமக்குள் பதிவு செய்து விட்டால் அதைத் திருப்பி எண்ணும் போது அதே வேதனை உணர்வு தான் விளைந்து வருகின்றது.

வாழ்க்கையில் அடிக்கடி வேதனை...வேதனை கோபம்...கோபம் சஙகடம்....சங்கடம் சலிப்பு...சலிப்பு பையன் சொன்னபடி கேட்கவில்லை சொன்னபடி கேட்கவில்லை என்றால் கோபமும் வேதனையும் ஆத்திரமும் அதிமாகிக் கடைசியில் இரத்தக் கொதிப்பாகின்றது.

பையன் சொன்னபடி கேட்கவில்லை என்ற நிலையில் வேதனைப்பட்டாலும் நாம் அந்த வேதனையுடன் மீண்டும் அவனிடம் ஏண்டா இப்படிச் செய்கின்றாய் என்று சொன்னால் அவன் மீண்டும் கெட்டுப்போகத் தான் அந்த உணர்வு வழி வகுக்கும்.

உலகம் இப்படித் தான் இருக்கின்றது. நம்மை அறியாமல் தீய சக்திகள் நம்மை எப்படி இயக்குகின்றது..? அதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்று தான் உங்களுக்குச் சக்தியே கொடுக்கிறேன்.

எனக்கு நன்றாக இருக்க வேண்டும். என் உடம்பு நன்றாக இருக்க வேண்டும். என் குடும்பத்தில் எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும். என்று இதைக் கேட்க முடியாதா…?

என் வீட்டில் இடைஞ்சலாக இருக்கிறது. என் எதிர் வீட்டுக்காரன் அது செய்கிறான். இது செய்கின்றான் என்று இதைத்தான் முன்னால் எடுத்துக் கொள்கிறீர்களே தவிர
1.நல்லது பெற வேண்டும்
2.என் பார்வை நல்லதாக இருக்க வேண்டும்.
3.என் சொல் நல்லதாக இருக்க வேண்டும்.
4.அது மாதிரி சொல்வதற்கு யாரும் வருவது இல்லை.

எதை எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் “ஓ…” என்று இயக்கி உங்கள் இரத்தத்தில் அது நிச்சயம் பதிவு செய்து விடுகின்றது.

அந்த இரத்தம் உங்கள் உடல் முழுவதும் சுழன்று வரப் போகும் போது உங்கள் உடலில் உள்ள நல்ல குணங்களை எல்லாம் அது பாழாக்குகின்றது.

நல்ல பாதாமை போட்டு கல்கண்டைப் போட்டு நல்ல பாலைப் போட்டு ஒரு துளி விஷம் பட்டால் என்ன ஆகின்றது?

பாதாமிற்குச் சக்தி இருக்கின்றதா…? இல்லை. ஆக அந்த விஷத்திற்குதான் சக்தி இருக்கிறது.

நீங்கள் எவ்வளவு பெரிய உயர்ந்த குணங்கள் வைத்து இருந்தாலும் அந்த வேதனை என்ற உணர்வை நீங்கள் எடுத்தவுடன் இந்த இரத்தத்தில் கலந்து இந்த இரத்தம் உடல் முழுவதற்கும் போகின்றது.

அந்த வேதனை என்பதே விஷம்.

உங்கள் இரத்தத்தில் கலக்கப்படும் போது நல்ல குணங்கள் எல்லாம் செயலற்றுப் போகின்றது.
1.ஞாபக மறதி வருகிறது.
2.அடுத்தவர்களிடம் சிந்தித்து பேசத் தெரியவில்லை.

நீங்கள் வேதனைப்பட்டுச் சமையல் செய்தால் என்னவாகும்?

சரியான முறையில் அடுப்பில் வேலை செய்யும் போது கவனக் குறைவாக கட்டையை வைத்துத் தள்ளுவதற்கு பதில் கையை வைத்துத் தள்ளுவீர்கள். தீ கையைச் சுட்டுப் போய்விட்டது என்பீர்கள்.

இது எல்லாம் எதை காட்டுகின்றது…?

நம்முடைய வேதனை உணர்வுகள் நம் சிந்தனையைக் கலைத்துவிடுகின்றது. ஏனென்றால் கெட்ட காலம் வந்தால் ஜோசியக்காரன் ஏதாவது சொல்லியிருப்பான். அந்த வேதனையை எடுத்துக் கொள்கின்றீர்கள்.

அப்போது எனக்கு இந்த மாதிரிக் கஷ்டம் வந்தது என்று இதை எடுத்து அதைத்தான் வளர்த்துக் கொள்கின்றீர்களே தவிர கஷ்டத்தை நீக்குவதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா…?

நீங்கள் எண்ணக்கூடிய எண்ணம்தான் உங்களை இயக்குகின்றது. அதற்குத் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று ஆசி கொடுத்து என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினையுங்கள் என்று ஆயிரம் தடவை பதிவு செய்கின்றேன்.

இதை நினைத்து உங்களால எடுக்க முடியாதா….? உங்களைக் காத்துக் கொள்ள முடியாதா….? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

கருமாரி உருமாரி திருமாரி" - அகஸ்தியன் பெற்ற அதிசய ஆற்றல்கள்


அகஸ்தியன் ஐந்து வயது இருக்கப்படும் பொழுது அவன் தாய் தந்தையர் இருவருமே சந்தர்ப்பத்தால் இறந்து விடுகின்றார்கள்.

ஏனென்றால் அவர்கள் தங்கள் உடல்களில் பூசிக் கொண்ட தாவர இனச் சத்துகளின் விஷங்கள் உடலுக்குள் ஊடுருவி உயிரான்மாவில் பெருகி அதனால் உயிர்கள் வெளியேறி விடுகின்றது.

ஆனாலும் தன் குழந்தை என்ற பாசத்தால் குழந்தையின் உடலுக்குள் இரு உயிரான்மாக்களும் சென்று விடுகிறது.

அந்தக் குழந்தையோ (அகஸ்தியன்) தாய் தந்தையின் ஏக்கத்தில் சூரியனைப் பார்த்து ஏங்குகின்றது...! கதறுகிறது...! (சூரியனைத்தான் அன்றைய மக்கள் கடவுளாக வணங்கி வந்தனர்)

அகஸ்தியன் அவ்வாறு விண்ணை நோக்கி ஏங்கும் போது சூரியனின் உணர்வின் ஆற்றலால்
1.அன்னை தந்தையர் தனக்குள் ஈர்ப்பாக எவ்வாறு வந்தார்கள் என்று (தனக்குள்ளே) அவனால் உணர முடிகிறது.
2.தன்னுள்ளே நின்று... “என் தாய் தந்தை என்னைக் காக்கின்றார்கள்...!” என்று அறிகின்றான்.

அவர்களின் ஆற்றல்களின் துணை கொண்டு சூரியனைப் பார்க்கப்படும் போது சூரியனுக்குள் எதிர் மறையாக மோதிக் கொண்டிருக்கும் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சு பிரிவதைப் பார்க்கின்றான்.

அதே சமயத்தில் தான் கவர்ந்து கொண்ட உணர்வுகளைச் சூரியன் அமிலமாக... “பாதரசமாக மாற்றி” அதைப் பரவெளியில் உமிழ்த்திக் கொண்டிருப்பதையும் காணுகின்றான்.

1.அந்தப் பாதரசம் மற்றொன்றோடு மோதும் போது (வெப்ப காந்த அலைகள் – வெயில்)
2.அந்தந்த உணர்வுகளை மாற்றி அதைத் தனதாகக் கவர்ந்து
3.அதனதன் உணர்வலைகளாக எவ்வாறு செல்கிறது...? என்ற நிலையும் அகஸ்தியன் கண்டுணர்கின்றான்.

இன்று விஞ்ஞான அறிவால் ஒரு அணுவின் தன்மையைக் கூர்மையாக அறிந்து அறிந்து இத்தனை ஆண்டுகளாக வளர்ந்த பாறை என்று காணுகின்றார்கள்.

அதைப் போல இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளை அந்த இளம் பிஞ்சு உள்ளத்திலேயே எளிமையில் கண்டுணர்ந்தான் அகஸ்தியன்.

சூரியன் எவ்வாறு உருவானது என்ற நிலையும் கடவுள் எவ்வாறு உருவானது என்ற நிலையும் அவன் சிந்தனைக்குள் கிளரச் செய்து விண்ணின் நிலையை அவன் நுகருகின்றான்.

ஒவ்வொரு அணுவின் தன்மையைப் பிளந்து பிளந்து ஆரம்பத்தில் அணுக்கள் எவ்வாறு உருவானது என்ற நிலையையும் உணர்ந்து வெளிப்படுத்துகிறான்.

ஆதியிலே பேரண்டம் எவ்வாறு இருண்ட சூழ்நிலைகள் இருந்தது..? அதிலே அணுக்கள் எப்படி உருவானது…? என்று விண்ணுலகின் தோற்றத்தை அகஸ்தியன் கண்டுணர்கின்றான்.

பேரண்டம் இருண்ட நிலையில் இருந்த அக்காலத்தில் நஞ்சு கொண்ட ஓர் அடர்த்தியான ஆவி நஞ்சற்ற நிலைகளில் மோதும் போது (BIG BANG என்பார்கள் விஞ்ஞானிகள்)
1.நஞ்சின் தன்மை  கொண்டு அதன் தாக்குதல் தாங்காது வெப்பமாகி
2.அது சுக்கு நூறாகத் தெறித்து சிதறுண்டு ஓடுகின்றது.
3.அவ்வாறு ஓடும் பொழுது அதனின் ஓடும் பாதையில் ஈர்க்கும் சக்தியான காந்தம் உற்பத்தியாகின்றது.
4.விஷம் காந்தம் வெப்பம் இது மூன்றும் சேர்த்து ஒரு அணுவின் தன்மையாக அடைகின்றது
5.முதன் முதலில் ஒரு இயக்க சக்தியாக இது எவ்வாறு உருவானது என்ற நிலையை
6.இந்த ஐந்து வயதுக் குழந்தை அகஸ்தியன் கண்டுணருகின்றான் .

அங்கு நடக்கும் அதிசயங்களையும் அற்புதங்களையும் பார்த்து உணர்கின்றான். அவன் உணர்ந்த நிலைகள் அனைத்தும் அவனுக்குள் விளைகின்றது.

இந்தச் சக்தி அவனுக்கு எப்படிக் கிடைத்தது...?

1.ஆரம்பத்தில் தாயின் கருவில் பெற்ற நஞ்சினை வென்றிடும் சக்தியும்
2.ஐந்து வயதில் அவனுக்குள் இணைந்த அன்னை தந்தையின் இரு உயிராத்மாக்களின் சக்தியும்
3.அந்த நஞ்சின் சக்திகளும் அகஸ்தியனுக்குள் வலு கூடப்பட்டு
4.பேரண்டத்தில் ஒரு அணுவின் தன்மை எவ்வாறு நஞ்சால் இயக்குகிறது என்ற நிலையை அவன் கண்டுணர்ந்தான்.

அவன் கண்டுணர்ந்த உணர்வுகள் அவன் உடலுக்குள் விளைந்து “அவனின் மூச்சலைகளாக...” அது விண்ணுலகிலும் படர்ந்துள்ளது. இந்த மண்ணுலகிலும் (நம் பூமியிலும்)  படர்ந்துள்ளது.

அகஸ்தியன் தான் உணர்ந்த பின் எல்லாவற்றுக்கும் பெயரிடுகின்றான்.
1.நெருப்பைப் பராசக்தி என்றும்
2.காந்தத்தை லட்சுமி என்றும்
3.விஷத்தை ஆதிகருமாரி என்றும் பெயரிடுகின்றான்.

ஆதி கருமாரி என்றால் இருண்ட நிலைகள் இருக்கும் போது அதற்குள் நஞ்சு கொண்டது நஞ்சற்றதைத் தாக்கப்படும் போது
1.இருண்டது வெப்பமாகி ஒளியாக மாறுவதும்
2.தாகுதலால் நகர்ந்து போவது ஈர்ப்பின் சக்தி அடைவதும்
3.ஒரு இயக்கச் சக்தியாக எவ்வாறு மாறுகிறது என்று அவன் உணர்ந்தான்.

அதாவது கருமாரி... உருமாரி... திருமாரி.. என்று இருண்ட நிலைகளிருந்து எப்படி “இயக்கச் சக்தியாக – கடவுளாக...!” உருவாகின்றது என்று காரணப் பெயரிடுகின்றான் அகஸ்தியன்.

அவன் எதையெல்லாம் வெளிப்படுத்தினானோ அந்த நினைவலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இங்கு படரச் செய்துள்ளது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்த அலைகளை நுகரும் பொழுது என்னாலும் அதை அறிய முடிந்தது. உணர முடிந்தது. உங்களாலும் அறிய முடியும்... உணர முடியும்...!

உதாரணமாக இன்று விஞ்ஞான அறிவால் விண்ணுலகில் நக்கும் நிலைகளை இயந்திரத்தின் துணை கொண்டு புகைப்படமாக எடுக்கிறான். அந்த ஒளி அலைகளை இங்கே பதிவாக்கிப் பிரித்துத் தரையிலிருந்து படமாகவும் எடுக்கிறான்.

அந்த உணர்வின் ஒளி அலைகளையும் நாதத்தின் தன்மையும் அதனுடைய அடர்த்தியையும் இன்று விஞ்ஞானி  கண்டுணருகின்றான்.

விஞ்ஞானிகள் எத்தனையோ இப்படிக் கண்டறிந்து வெளிப்படுத்தினாலும் மெய் ஞானிகள் கண்டுணர்ந்ததை இன்னும் துரும்பளவு கூடச் சொல்லவில்லை. ஏனென்றால்
1.நான் (ஞானகுரு) படிப்பறிவு அற்றவன்.
2.மூன்றாவது வகுப்பு கூட முழுமையாகப் படிக்கவில்லை.
3.எனக்கு விஞ்ஞான அறிவும் இல்லை.
4.புத்தகங்களையும் படித்ததில்லை.

ஆனால் விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசுகிறேன் என்றால் அந்த மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை எனக்குள் பதிவானது. பதிவானதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து வளர்த்துக் கொண்டேன்.

அப்படி வளர்த்த நிலைகள் கொண்டு தான் என்னால் அறிந்துணர முடிந்தது. அதை உங்களுக்கும் எடுத்துரைக்க முடிகின்றது. இது உங்களுக்குள் பதிவான பின் அண்டத்தின் நிலைகளை நீங்களும் கண்டுணரவும் முடியும்.

அண்டத்தில் உருவானது தான் இந்தப் பிண்டத்திலும் இருக்கின்றது. அதை அறியும் உணர்வுகள் வரப்படும் போது உங்களுக்குள் இது ஒளியாக மாறி அந்த மெய் ஞானிகளின் உணர்வுடன் உங்கள் உயிரான்மாவும் ஒன்றுபடும்.

1.பிறவியில்லா பெரு நிலையை நீங்கள் அடைய முடியும்.
2.அதற்காகத் தான் இதை உங்களுக்குள் பதிவாக்குகிறோம்.

அகஸ்தியன் பெற்ற அதிசய ஆற்றல்களை ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கிறோம்.

Thursday 30 January 2020

அகஸ்தியன்... துருவன்... ஆற்றல்கள் எப்படிக் காலத்தால் மறைந்தது…?


பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனைப் பற்றிப் பல தடவை சொல்லியுள்ளோம்.

காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் காட்டு விலங்குகளில் இருந்து தப்பிக்கப் பல விதமான பச்சிலைகளையும் மூலிகைகளையும் அரைத்துத் தங்கள் உடலில் பூசிக் கொள்கிறார்கள்.

பாம்பினங்களோ மற்ற மிருகங்களோ இவர்கள் உடலில் பூசிய மணத்தை நுகர்ந்தபின் விஷத்தன்மை ஒடுங்கி விலகிச் செல்கிறது. யானைகளும் மூர்க்கத்தனமாகத் தாக்கி உணவாக எடுக்கும் நிலைகளில் இந்தப் பச்சிலையின் மணம் பட்ட பின் அந்த விஷத்தின் தன்மை ஒடுங்குகின்றது.

இரவிலே குகைகளில் படுத்திருக்கும் போதும் பச்சிலைகளையும் மூலிகைகளையும் பரப்பி வைத்துக் கொள்கிறார்கள். மற்ற உயிரினங்கள் இரை தேடி வந்தாலும் இதை நுகர்ந்த பின் இது மயக்கமடைந்து இவர்கள்  பக்கம் வராது வேறு பக்கம் சென்று விடுகிறது. அவர்கள் பயமின்றித் தூங்குகின்றார்கள்.

சந்தர்ப்பத்தால் கருவுறும் சமயம் இவர்கள் பூசிய முலாம்களைக் கருவிலே உருவாகும் அந்த குழந்தைக்கும் போய்ச் சேர்கின்றது. நுகர்ந்த உணர்வுகள் கருவிலே இணைந்து நஞ்சை நீக்கிடும் அணுக்களாகப் பெறுகின்றது.

இப்படி உருவான குழந்தை (அகஸ்தியன்) பிறந்த பின் சூரியனை உற்றுப் பார்க்கின்றான்.

சூரியனை நம்மால் காண முடியவில்லை... கண் கூசுகின்றது. ஆனால் அகஸ்தியனோ சூரியனுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைக் காணுகின்றான். மோதலில் ஒளிப் பிளம்புகள் வருவதை இவன் உற்றுப் பார்த்து அந்தப் பிஞ்சு உள்ளத்திலே சிரிக்கின்றான். மகிழ்கின்றான்.

பிரபஞ்சத்தின் உணர்வுகள் அதன் தொடர் அலை வரிசையில் எங்கு செல்கின்றதோ பிரபஞ்சத்தைப் பற்றியும் இளம் பருவத்திலேயே அவன் உணர்கின்றான்.

அவன் மகிழ்கின்றான். ஆனால் சொல்லால் வெளிப்படுத்தும் நிலை இல்லை.

1.நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து கவர்வதும்
2.அதனின் உணர்வுகள் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் மோதும் போது மத்தாப்பு போல ஒளி அலைகளாக மாறுவதையும்
3.ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வுகள் மாறுபட்டு மின் அணுக்களாக மாறுவதையும்
4.வான வீதியில் நடக்கும் இந்த அதிசயங்களை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் அகஸ்தியன்.
5.விஷத்தை அடக்கிடும் உணர்வின் ஆற்றலை அவன் பெறும் போது
6.நுகரும் உணர்வுகளை அவன் உயிர் ஞானத்தின் வழித் தொடரிலே இயக்கி
7.ஒளியின் சிகரமாக எதையும் அறியும் அறிவாக அந்தப் பிஞ்சு உள்ளத்தில் அவனுக்குள் விளைகின்றது.
8.நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் அவனுக்குள் விளைகின்றது.

இப்படி அவன் வளர்ந்து வரும் நிலைகளில் அகஸ்தியனைத் தூக்கிக் காடுகளுக்குள் சென்றால் மற்ற மிருகங்களோ யானையோ புலியோ பாம்போ மற்ற விஷ வண்டுகளோ இவர்கள் அருகிலே வருவதில்லை.

தனித்து இவன் காட்டுக்குள் சென்றால் மிருகங்கள் அனைத்தும் இவனைக் கண்டு பதுங்கி வருவதும் இவனுக்குப் பின் வருவதும் போன்ற நிலையாகின்றது. இவன் ஓர் அரசன் ஆகின்றான்.

தன் ஐந்தாவது வயதில் நம் பூமி கவரும் துருவத்தின் ஆற்றலை அறிகின்றான். அகஸ்தியன் துருவனாகின்றான்.

ஆனால் காவியங்களில் காட்டும் பொழுது அந்தத் துருவனை ஒரு அரசனாகப் பிற்காலங்களில் காட்டிவிட்டார்கள். அதற்குப் பின் அவனின் சரித்திரம் இருக்காது.

அவன் கடும் ஜெபம் எடுத்தான் என்று அவனை அரசன் என்ற நிலைகள் கொண்டு தான் காட்டினார்களே தவிர அந்தத் துருவன் துருவ மகரிஷியாகி எவ்வழியில் விண்ணுலகம் சென்றான் என்ற நிலைகள் இல்லை.

ஆனால் இந்தக் காவியங்களை எல்லாம் (புலையர்...) “புலஸ்தியர்..” தான் வெளி உலகிற்குச் சொன்னார் என்று சொல்வார்கள்.

ஓர் அரசனுக்கு இரண்டு மனைவி. இரண்டு பேருக்கும் அவரவர்களுக்கு குழந்தை உண்டு.

ஒரு அரசி தன் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் பொழுது அதே சமயத்தில் இன்னொரு தாயின் மகன் தன் தந்தையிடம் வந்து அது அமர்ந்து அது கொஞ்ச வேண்டும் என்று உணர்வுகள் வரப்படும் போது இந்தத் தாய் அவனைக் கொஞ்ச விடாது தடுக்கின்றது.

ஆகையினால் வெறுத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றான். அங்கே தனித்துத் தவம் இருந்தான் என்று உண்மையின் இயக்கங்களை நாம் அறியாதபடி தவறின் முறைகளைக் காட்டிவிட்டார்கள்.

துருவனின் (அகஸ்தியனின்) இயக்கத்தை நாம் அறிந்திடாது அரசருக்குகந்த நிலைகளாகப் பல நிலைகளைச் சொல்லி அசுர உணர்வுகளும் மற்ற குணங்களும் என்ற நிலைகளில் காவியங்களைப் படைத்து மகாபாரதம் இராமயாணம் போன்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.

கந்த புராணம் சிவ புராணம் என்று வந்தாலும் அதில் அகஸ்தியன் கணபதியை வணங்கினார். அதனால் அவருக்கு அதீத சக்தி ஏற்பட்டது. வாதாபி கணபதியை அகஸ்தியன் வணங்கியதால் அவரை யாரும் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று இப்படித்தான் பறைசாற்றி விட்டார்கள்.

அகஸ்தியர் பெற்ற ஆற்றல்களை முழுமையும் காட்டாதபடி காவியத் தொகுப்புகளில் ஒவ்வொருவரும் அவரவருக்கு தக்கவாறு வெளிப்படுத்தி விட்டனர்.

1.பல பல நூல்களைப் படித்தவர்கள் உண்மையின் நிலைகள் உணராது
2.தான் படித்ததே… தனக்குத் தெரிந்ததே “பெரிது” என்று வாதிட்டுக் கொண்டு
3.அவர்கள் முன் மொழிவதைச் சட்டமாக்கப்பட்டு மந்திரங்களாகச் செயல்படுத்தி விட்டார்கள்

அகஸ்தியர் அந்த மந்திரத்தை ஜெபித்தார் அந்த ரிஷி இந்த மந்திரத்தை ஜெபித்தார் என்று மனித உடலில் உருவான உணர்வை எடுத்து அந்த உணர்வுகள் பதிவான பின் அவன் இறந்தால்
1.இதே மந்திரத்தை இன்னொருவர் ஜெபித்தால்
2.அந்த ஆன்மாவைத் தனக்குள் கைவல்யப்படுத்தும் நிலையாகச்
3.சாகாக்கலையாக உருவாக்கி விட்டார்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஒளியின் சரீரமாகப் பெற்ற அந்த "வேகா நிலைக்கு" ஒவ்வொருவரையும் அழைத்துச் செல்லும் மார்க்கத்தையே மாற்றி விட்டார்கள்.

புரையேறுதலால் ஏற்படும் விபத்துகள் – புரையேறக் காரணமும் அதைத் தடுக்கும் வழியும்


நண்பர்களாக ஒருவருக்கொருவர் பழகுகின்றோம். குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் பற்றும் பாசத்துடன் இருக்கின்றோம். உறவினர்களுடனும் நாம் பாசமாப் பழகுகின்றோம்.

1.பாசத்துடன் நாம் பழகி வந்தாலும்
2.நாம் (ஒவ்வொருவரும்) பேசியது நமக்குள் பதிவானது நமக்குள் உருவானது இரண்டும் கலந்தது
3.இது எல்லாவற்றையும் சூரியனின் காந்த சக்தி (வெயில் என்று சொல்கிறோம் அல்லவா) எடுத்து
4.இங்கே தனித்தனியாக (அலாக்காக) அலைகளாக இந்தக் காற்று மண்டலத்தில் வைத்திருக்கின்றது
5.இன்று BANK என்று சொல்வது போல் காற்று மண்டலத்தில் எல்லாவற்றையும் சூரியன் அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது.

டி.வி. ரேடியோ கம்ப்யுட்டர் மூலம் ஒலி, ஒளிபரப்பு செய்கின்றார்கள். அலைகளாகத் தான் இருக்கின்றது. நாம் கண்ணிலேயா பார்க்கின்றோம். பார்க்க முடிவதில்லை.

ஒலி ஒளியாக வருகின்றது. அதை இயந்திரத்தில் எடுத்து எந்த ஸ்டேசனோ அதைத் திருப்பி வைத்தோம் என்றால் அது பிரித்துக் கொடுக்கின்றது. நாம் பார்க்கவும் கேட்கவும் முடிகின்றது.

அதைப் போன்று தான் இப்போது நீங்கள் சும்மா இருக்கின்றீர்கள். உங்களுக்கு வேண்டாதவர் அமெரிக்காவில் இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

சும்மா உட்கார்ந்திருக்கும் அந்த நேரத்தில் இரண்டு பேருக்கும் வேண்டிய நண்பர் உங்களைச் சந்திக்க வருகின்றார்.

நான் அமெரிக்காவிற்குப் போனேன். அங்கே அந்த நண்பரைப் பார்த்தேன். அவரைப் பார்த்தோம் என்றால் எக்கச்க்கமாகச் சம்பாரிக்கின்றார் என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார்.

அதைக் கேட்டவுடனே அந்த அலைகளைக் கவர்ந்து
1.“ஜிர்ர்ர்ர்……!” என்று கோபம் வருகிறது
2.அவனா…? துரோகி..! எனக்கு இடைஞ்சல் செய்தான்…
3.எங்கே போனாலும் அவன் உருப்பட மாட்டான் என்று சொல்கிறோம்.

நமக்குப் பிடிக்காதவன் நன்றாக இருக்கின்றான் என்று சொன்னால் நம்மை அது சந்தோஷப்பட வைக்குமா,...?

அவர் அப்படிச் சொன்னவுடனே அமெரிக்காவிலிருக்கும் அவனின் நினைவலைகள் வருகின்றது. அந்த உருவமே இங்கே தெளிவாகத் தெரியும்.

அவனின் நினைவலைகளை எடுத்து இதனுடன் கலந்து” உருப்படாமல் போவான்...!” என்று சொன்னவுடன் இந்த உணர்வுகள் அங்கே (அமெரிக்காவில்) அவனுக்குள் போய் இணைத்துவிடும் (CONNECT).

 1.அமெரிக்காவில் அவர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது இந்த மாதிரி ஆனால் என்றால் புரை ஓடிவிடுகின்றது.
2.மற்றொருவருடன் ஒரு நல்ல பேச்சு பேசிக் கொண்டு இருக்கும் போது உடனே குறுக்காட்டிப் (இடைமறித்து) புரை ஓடுகின்றது.
3.காரோ வேறு ஏதாவது வாகனம் ஓட்டி கொண்டு போனாலும் புரை ஓடும். ஒரு விநாடி அந்த அலைகள் மாறி ஏமாந்தோம் என்றால் கார் ஓட்டிக்கொண்டு இருக்கும் போது மோதி ஆக்ஸிடென்ட் ஆகிவிடும்.

சும்மா இருக்கும் போது புரை ஓடுவது வேறு...! சாப்பாடு சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது புரை ஓடினால் மூக்கு காது தொண்டை ஈரக்கொலை எல்லாம் புரை ஓடிவிடும். “உயிருக்கே ஆபத்தாகும்....!”

மனிதனின் உணர்வலைகள் இப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்ட நிலையில் இயக்குகின்றது.

இத்தகைய எதிர்பாராது இயக்கக்கூடிய தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுத்து ரிமோட் கன்ட்ரோல் (REMOTE CONTROL) போல அந்த அலைகள் நமக்குள் புகாது பாதுகாப்புக் கவசமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

1.அதிகாலையில் எழுந்திருக்கும் பொழுதும்
2.இரவு படுக்கும் பொழுதும்
3.அல்லது வெளியில் எங்கு செல்வதாக இருந்தாலும்
4.எந்த ஒரு காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாடியும்
5.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
6.நாங்கள் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
7.நம் ஆன்மாவில் பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.
8.நம் எண்ணத்திற்குள் அந்த மகரிஷிகளின் வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

நம் ஆன்மாவில் மகரிஷிகளின் அருள் சக்தி அதிகமானால் ராடார் (RADAR) இயக்கம் போல் தீமை செய்யும் உணர்வலைகள் நம் ஆன்மாவில் வந்து மோதும் சமயம் அதை உள்ளே விடாது விலக்கித் தள்ளிவிடும்.

இதற்குப் பெயர் தான் ஆத்ம சுத்தி என்பது. சக்தி வாய்ந்த ஆயுதமாக உங்களுக்குக் கொடுக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Wednesday 29 January 2020

தீமைகளை அடக்கி அதன் மீது “சவாரி செய்ய வேண்டும்…!” என்றார் குருநாதர்


விநாயகனை வணங்காமல் கோயிலுக்குள் போனால் பலன் ஏதும் இல்லை என்று சொல்கிறோம். அந்த நல்ல வினை எது…? நல்ல வினையை எப்படி நமக்குள் சேர்க்க வேண்டும்…? நல்ல பலனை எப்படிப் பெறவேண்டும்…?
1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
4.அதாவது தீமைகளை வென்ற வினைகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.

நாம் யார் யாரை எல்லாம் பார்க்கின்றோமோ அவர்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும்.

ஏனென்றால் நாம் பார்த்தவர்கள் எல்லாம் நம்மிடம் இருக்கின்றார்கள். அதாவது அவர்களின் உணர்வுகள் எல்லாம் நம் உடலுக்குள் இருக்கின்றது என்று குருநாதர் உணர்த்துகின்றார்.

எத்தனையோ பேரைப் பார்த்த அந்த உணர்வுககள் அனைத்தும் பல பல வினைகளாக நமக்குள் விளைந்திருக்கின்றது. அதற்குள் அந்த மகரிஷிகளின் உணர்வை இணைக்கச் செய்து நல்ல வினைகளாக மாற்ற வேண்டும்.

குருநாதரைச் சந்தித்த ஆரம்பத்தில் இதை எனக்கு உணர்த்துவதற்காக என்ன செய்தார்….?
1.விநாயகர் மேலே சவாரி ஏறி உட்கார்ந்து
2."நான் தான்டா விநாயகன்…" என்று சங்..சங்…சங்… என்று குதிக்கின்றார்,

வருகின்றவர்கள் போகின்றவர்கள் எல்லாம் இதைப் பார்த்து என்ன சொல்கிறார்கள்.

ஏனய்யா…! பைத்தியத்தைக் கொண்டு இப்படி விநாயகர் மேலே ஏற விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றாய்…? ஏன் இந்த மாதிரிச் செய்து கொண்டிருக்கின்றாய்…? என்று கேட்டார்கள்.

அவர்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்குக் கஷ்டமாகத் தான் இருந்தது.

ஆனால் குருநாதர் விளக்கம் கொடுக்கும்போது தான் அதனின் உட்பொருள் என்ன என்று அறிய முடிந்தது.

எது….?

நமக்குள் எதை அடக்க (சவாரி) வேண்டும்…? என்று உணர்த்துகின்றார்.

1.அருள் ஒளி கொண்டு உடலுக்குள் வந்த தீய வினைகளை அடக்க வேண்டும். 
2.அருள் ஒளியை நமக்குள் வினையாக்க வேண்டும்.
3.அந்தச் சவாரி செய்ய வேண்டுமடா…! என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

குருநாதர் முதலிலே இந்த மாதிரி வேலைகளைச் செய்வார். ஆனால் பின்னாடி தான் உண்மைகளை எல்லாம் விளக்கிக் காட்டுவார்.

1.நான் பார்க்கின்றவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.
2.நான் பார்த்தவர்கள் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.
3.எல்லோரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற இந்த உணர்வுடன்
4.அந்த மகரிஷியின் அருள் சக்தியை நீ பெறுவதற்கு உன் எண்ணம் முயற்சியாக இருக்க வேண்டும் என்றார்.

இருந்த இடத்திலிருந்தே ஈஸ்வரனின் துணை கொண்டு வரும் சிக்கல்களிலிருந்து நாம் விடுபட முடியும்


ஒருவன் கெடுதல் செய்கிறான் என்று பார்க்கின்றோம். நம் கண்கள் காட்டுகின்றது. கெடுதல் செய்யும் உணர்வினை உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது,

நம் கண்கள் எதைப் பார்த்து பதிவு செய்ததோ அவனைப் பார்த்தவுடனே “தவறு செய்பவன்...” என்று நமக்கு உணர்த்துகின்றது. கெட்டவன் என்று தெரியும் போது அந்த உணர்வால் விலகிச் செல்கின்றோம். கண்கள் நம்மைக் காப்பாற்றுகின்றது.

அல்லது அவன் தாக்க வருகின்றான் என்றால் அதைத் தடுப்பதற்குத் தக்க ஆயுதத்தை நம்மிடம் வைத்துத் தன்னைப் பாதுகாக்கவும் செய்கின்றது... இதே கண்கள் தான்.

இருந்தாலும் அவன் நம்மைத் தாக்க வருகின்றான் எனும் பொழுது நாம் நுகர்ந்த உணர்வோ அவனை நாம் அழிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
1.நம் உயிர் என்ன செய்கின்றது...?
2.அதே உணர்வின் அணுவாக மாற்றுகின்றது.
3.அப்போது அவன் அழிக்க வேண்டும் என்ற உணர்வு இங்கே இரத்தத்தில் கருவாக உருவாகின்றது.
4.இப்படிச் செய்கின்றான்... அவனை விடுவதா… விடுவதா… விடுவதா…? என்று இதைக் கூட்டுகின்றோம்.

அப்போது கருவுற்ற ஒரு கோழி கேறுகின்ற மாதிரி நமக்குள் அது உருவாக்கி விடுகின்றது. அது உருவாக்கிய பிற்பாடு என்ன செய்கின்றது?

அவன் எப்படி நமக்கு இடையூறு செய்ய வேண்டும் என்று நினைத்தானோ அது நமக்குள் வந்து நம்மிடமிக்கும் நல்ல குணத்தை இது இடையூறு செய்து கொண்டே இருக்கும். நல்லதைச் செயல்படுத்த விடாது.

தவறு செய்பவன் எங்கயோ இருக்கின்றான் என்று நினைக்கின்றோம். அவன் உடலில் விளைந்தது நமக்குள் நரகாசுரனாக அசுர குணங்களாக உருவாக்குகின்றது.

அவன் அசுரன் என்று காட்டுகின்றது. நாம் நுகர்ந்து அறிகிறோம். ஆனால் நமக்குள் பதிவாகிவிடுகின்றது.

அசுத்தம் என்று தெரிகின்றது. அந்தச் சாக்கடை மேலே பட்டவுடனே அறிகிறோம் - “கார்த்திகேயா...!” உடனே நல்ல நீரை வைத்துச் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.

அதே மாதிரி அசுர குணம் என்று தெரிகின்றது. அதை நிறுத்த வேண்டும் அல்லவா...?

அதை அடக்குவதற்கு அந்த அருள் ஞானியின் உணர்வைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த அசுர குணத்தை அடக்கி விடுகின்றது. அதை எழுந்திரிக்க விடுவதில்லை.

1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும்.
2.வைரத்தைப் போல எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்.
3.எங்கள் சொல் ஜொலிக்க வேண்டும்... செயல் ஜொலிக்க வேண்டும் என்று கூட்டிவிட்டோம் என்றால்
4.இந்த வெளிச்சத்திற்குள்ளே அந்த இருள் (அசுர குணம்) மறைந்துவிடுகின்றது.

இந்த வைரம் விஷம் கொண்டது தான். ஆனால் அது ஜொலிக்கின்றது. வைரத்தைப் போல தன் உணர்வுகளை எல்லாம் ஜொலிக்கச் செய்தவன் துருவன்.

அப்போது நமக்குள் வேதனை என்ற உணர்வு வரப்போகும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நுகர்ந்தோம் என்றால் இருள் மறைகின்றது.

இல்லை என்றால் நம் அறிவை மழுங்கச் செய்யும் போது நமக்குள் என்ன செய்யும்..?

எவ்வளவு திறமையாக இருக்கும் கொஞ்சம் விஷம் போட்டால் என்ன செய்யும்...? நம் எல்லா வலுவும் இழந்து விடுகின்றது. ஐய்யயோ ஐய்யயோ இப்படி ஆகின்றதே.. செத்துப் போய்விடுவோம் என்ற இந்த உணர்வு தான் வருகிறது. தன்னைக் காப்பாற்றுவதற்கு முடிகிறதோ...?

பதறுவோம்… பதட்டமாவோம்...! காப்பாற்றுவதற்கு முயற்சியும் எடுக்கின்றோம். முயற்சி எடுத்தாலும் முடியாத நிலை வரப்போகும் போது அது வீழ்த்தி விடுகின்றது. 
1.நம்மால் முடியவில்லை...!
2.பின் வேறு யாராவது தான் வந்து நமக்கு உதவி செய்ய வேண்டும்.

ஆனால் நாம் இருந்த இடத்திலிருந்தே உதவியைப் பெற வேண்டும் என்றால் யாரிடம் கேட்க வேண்டும்...? எப்படிக் கேட்க வேண்டும்...?

எதிர்பாராத நிலை வந்து விட்டது. ஒருவன் தவறு செய்கின்றான். நம்மால் முடியவில்லை என்கிற பொழுது
1.“ஈஸ்வரா.....” என்று புருவ மத்தியில் நம் உயிரிடம் கேட்க வேண்டும்.
2.ஈஸ்வரா என்று சொன்னவுடனே கண்ணோட நினைவு நேரடியாக அந்தத் துருவ மகரிஷியின் பால் செல்ல வேண்டும்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டும்
4.இந்த இருட்டை அப்பொழுதே அது வெல்லுகின்றது.

அந்த இரண்டையும் சேர்த்து துருவ நட்சத்திரத்தின் அணுவாக உருவாக்கப்படும் போது வேதனைகளை அடக்குகின்றது.

இதைப் பழக்கப்படுத்திக் கொண்டால் இருந்த இடத்திலிருந்தே உயிரின் துணை கொண்டு வரும் சிக்கல்களிலிருந்து விடுபட முடியும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேரருள் பேரொளியின் உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது.